Sunday, April 10, 2016

தென்றல் வந்து தீண்டும் போது

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல 
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல 
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா 
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா 
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன் 
பொன்னம்மா சின்ன கண்ணே 
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல 
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல 

வெவரம் சொல்லாமே பூக்களெல்லாம் வாசம் வீசுது 
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது 
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது 
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது 
ஓடை நீரோடை எந்தன் மனசும் அதுபோல 
ஓடம் அது ஓடும இந்த காலம் அது போல 
நெலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே 

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல 

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது 
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது 
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது 
அலையும் அல போல அழகெல்லம் கோலம் போடுது 
குயிலே குயிலினமே அத இசையா கூவுதம்மா 
கிளியே கிளியினமே அத கதையா பேசுதம்மா 
கதையா விடுகதையா யாவுமில்லையே அன்பு தான் 

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல 
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல 
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா 
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா 
உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன 
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல 
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

No comments:

Post a Comment