Sunday, April 10, 2016

தென்றல் வந்து தீண்டும் போது

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல 
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல 
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா 
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா 
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன் 
பொன்னம்மா சின்ன கண்ணே 
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல 
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல 

வெவரம் சொல்லாமே பூக்களெல்லாம் வாசம் வீசுது 
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது 
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது 
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது 
ஓடை நீரோடை எந்தன் மனசும் அதுபோல 
ஓடம் அது ஓடும இந்த காலம் அது போல 
நெலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே 

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல 

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது 
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது 
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது 
அலையும் அல போல அழகெல்லம் கோலம் போடுது 
குயிலே குயிலினமே அத இசையா கூவுதம்மா 
கிளியே கிளியினமே அத கதையா பேசுதம்மா 
கதையா விடுகதையா யாவுமில்லையே அன்பு தான் 

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல 
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல 
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா 
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா 
உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன 
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல 
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
படம் : Kizhakku Vasal
பாடல் : அட வீட்டுக்கு வீட்டுக்கு
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: Vaali
பாடியவர்கள் : இளையராஜா


அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கட்டி வேணும்
தல வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததிகின ததிகின ததிகின தகத்தோம்
(வீட்டுக்கு..)

அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டும்
அதில் முத்து எடுப்பவன் கஷ்டம்
இந்த ஊருக்கு தெரியாது
உள் மனசுல ஆயிரம் பாரம்
அது பாட்டுல ஓடிடும் தூரம்
இது யாருக்கும் புரியாது

ஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல
ஆணில்லாம பெண்ணும் இல்ல
துன்பம் இல்ல பேரும் இல்ல
வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததிகின ததிகின ததிகின தகத்தோம்
(வீட்டுக்கு..)

புது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு
ரெண்டு மாடுகள் பூட்டிய ஏறு
என்றும் வாழணும் பல்லாண்டு
ஒரு மல்லிகை மெத்தையை பாரு
அந்த மன்மதன் வித்தையை காட்டு
நான் கேட்கணும் தாலாட்டு

ஆடை இல்லாத உடலும் இல்ல
அலையும் இல்லா கடலும் இல்ல
ஓசை இல்லா மணியும் இல்ல
பாசம் இல்லா மனசும் இல்ல
வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததிகின ததிகின ததிகின தகத்தோம்
(வீட்டுக்கு..)

அந்தி மழை பொழிகிறது -

படம் : ராஜபார்வை
பாடல் : அந்தி மழை பொழிகிறது
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

தேனில் வண்டு மூழ்கும் போது
பாவம் என்று வந்தால் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இள மயிலே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சுபொறு கொஞ்சமிரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
சிப்பியில் தப்பிய நித்திளமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது